தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட டங்ஸ்டன் ஏலம் திரும்பப் பெறும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு.
மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
Read More