முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்-முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஹோம் டெலிவரி- ரேஷன்..
தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ் 12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
Read More