lunar

அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

இன்று சந்திர கிரகணம்..

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக, நிலவு, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது மிகவும் அரிய சந்திர கிரகணம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, சீனாவில் இந்தச் சந்திர கிரகணம் முழுமையாகத் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8.58 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு ரத்த சிவப்பாகக் காட்சியளிக்க உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தச் சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களின் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை 9 மணிக்குச் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் நடை இன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நடை இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியான இன்று இரவு 9:56:08 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:26:08 மணிக்கு முடிவடையும். இன்று இரவு ரத்த கலரில் நிலவு தென்படும்.
சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகண காலத்தில் யாரும் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது என சொல்லப்படுகிறது. இப்படி செய்வதால் ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம். பிறகு கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி இலைகள் அல்லது அருகம்புல் இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது. கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை சீவுவது, பல்துலக்குவது போன்ற செயல்களை தடுக்கவும். கிரகணத்தின் போது தூங்க கூடாது என்பது நம்பிக்கை.
இரவு 8.58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2 மணி வரை நிகழ இருக்கிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை 9 மணிக்கு சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் நடை இன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நடை இன்று மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயில் வழக்கம் போல நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று பிற்பகல் 3.30 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை நடை அடைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Read More