lokesh

இந்தியாசினிமாதமிழ்நாடு

ரஜினியின் கூலி-இது எப்படி இருக்கு ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் வெளியான நிலையில், பலதரப்பட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காலை 9 மணி காட்சி
கூலி கதை: சைமன் (நாகார்ஜுனா) ஹாரிபரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
ரஜினிகாந்தை செம மாஸாக காட்ட வேண்டும் என்கிற செக் பாக்ஸை பக்காவாக டிக் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக கூலி…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு.
மைனஸ்: படத்தின் முதல் பாதி கூட நன்றாகவே சென்றது. ஆனால், படத்தின் 2வது பாதியில் கதை இழுத்துக் கொண்டே சென்றது தான் படத்திற்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அதிலும், அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் கேமியோ எல்லாம் கூலி படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஏதோ ஃபில்லர்ஸ் போட்டது போலத்தான் உள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டுவது போல அமீர்கானின் தாஹா கேரக்டரை வைத்து கூலி 2வுக்கு லீடு கொடுத்து முடித்திருந்தால் கூட தரமாக இருந்திருக்கும். அதே போல இந்த படத்தில் ரெட்ரோ பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வித வித விதமாய், வித்யாசமாய் கொல்வது தான் படம் முழுக்க வருகிறது. ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸிக்கு எல்லாம் எந்தவொரு வேலையும் இல்லை. ஒரு சில ட்விஸ்ட்டுகள் வொர்க்கவுட் ஆனாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே அவை கொடுக்கின்றன. கிளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால், இந்த கூலி ஹைப்புக்கு ஏற்ற வொர்த்தாக இருந்திருக்கும். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு, ஆக்‌ஷன், ஸ்டைல் மற்றும் உழைப்பு கடைசி வரை ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தாராளமாக தியேட்டரில் படத்தை பார்க்கலாம். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்!
ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

Read More