kkr

IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சென்னை; கொல்கத்தா அபார வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தாவின் அசத்தல் பந்துவீச்சால் 103 ரன்களில் சுருண்ட சென்னை; நரைன் அதிரடியில் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொல்கத்தா அபார வெற்றி
சென்னை சார்பில் 11வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்து நோபாலாகி 2 ரன்கள் கிடைத்தது. ப்ரீஹிட்டில் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்க கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து, சென்னையை வீழ்த்தியது.
எம்.எஸ். தோனி: நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். சில சமயங்களில் நாங்கள் சேசிங் செய்ய முயற்சித்தோம், மைதானம் கொஞ்சம் மெதுவாகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே நீங்கள் நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்தில் உள்ளது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, எனவே அவர் போட்டியிலிருந்து வெளியேறுகிறார். அவர் மிகவும் சிறப்பான பேட்டர், பந்தை சரியாக டைமிங்கில் அடிக்க முயற்சிப்பவர். ஆமாம், அவர் இல்லாதது பெரிய விஷயம் தான். இப்போது அது முக்கியம், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நாங்கள் நிறைய போட்டிகளில் தோற்றுள்ளோம், இப்போது அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம் – டாட் பால்களை வைத்திருப்பது, கேட்சுகளை எடுப்பது. இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ஆனால் இல்லையெனில் அது சிறிய விஷயங்களைப் பற்றியது – ஒரு ஓவர் 20 ரன்களுக்குச் செல்வது பற்றியது. எங்கள் பேட்டர்கள் பேட்டர்களாக மிகவும் உண்மையானவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் சளைக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வை ஆதரிக்க வேண்டும். நன்றாகத் தொடங்குவது, ஆரம்பத்தில் பவுண்டரிகளைப் பெறுவது மற்றும் இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளையும் எடுக்க முயற்சிப்பது முக்கியம். எங்களுக்கு இரண்டு மாற்றங்கள் – ருதுராஜுக்குப் பதிலாக திரிபாதியும், முகேஷுக்குப் பதிலாக அன்ஷுல் காம்போஜும் வருகிறார்கள்.

Read More