healthminister

Covid19தமிழ்நாடு

கொரோனா தொற்று..! மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறதா பெருந்தொற்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய பெருந்தொற்று குறித்த ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக, ‘மெர்ஸ்’ (MERS) என்ற வகை வைரஸ் பரவியது. இது பெரிய அளவில் பரவாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு மரணத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த வடிவமாகவே ‘சார்ஸ் கோவிட்’ (SARS-CoV) எனப்படும் கொரோனா வைரஸ் உருவெடுத்து, உலகெங்கும் மிக வேகமாகப் பரவியது.
கொரோனாவைப் போலவே, இந்த வைரஸும் சுவாச மண்டலத்தின் வழியாக மனித உடலுக்குள் நுழையக்கூடியது. எச்.கே.யு.-5 வகை வைரஸ் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அதற்கான திறன் இந்த புதிய வைரஸுக்கு இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Read More