2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை – ஆளுனர் உரையுடன் இன்று தொடக்கம்
2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், வழக்கம்போல் ஆளுநரின் உரையுடன் ஆரம்பமாகிறது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த வகையில், தற்போது ராஜ்பவன் (லோக் பவன்) மற்றும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இந்த ஆண்டு ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.பொன்னுசாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நாள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெறுகிறது:
Read More