finanaceminister

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்-முக்கிய அறிவிப்புகள்….

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல்* மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு. * 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
* விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.175 கோடி செலவில் 3.4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.78.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள். அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.27 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் * அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடையும் விதமாக, கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட இருக்கிறது.ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் * பயிர் சேதங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயிர் சேத நிவாரணத்தால் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் பன்னீர்செல்வம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்- தங்கம் தென்னரசு தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது-
8 லட்சம் வீடுகள் இலக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்,கனவரால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகிறார்கள் புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது.

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும், 5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள்.

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..மற்றும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Read More