coimbatore news

தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டம்: கோவையில் திறன் பயிற்சி மையம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய அவர், “முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சட்டப்பேரவையில் நாம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் – Placement Centres-ஐ இன்று கோவையில் இருந்து திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே போல, முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக பணி வாய்ப்பினைப் பெற்றுள்ள 3 ஆயிரத்து 700 பேரில், 30 மாணவர்களுக்கு இங்கே பணி நியமன ஆணைகளையும் வழங்க இருக்கின்றோம். இதன் மூலம், ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 42 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் (Annual Salary) பணி நியமனம் பெற்றுள்ள உங்களுடைய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் Tamil Nadu Skill Development Corporation சார்பாக, கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், Schneider (ஸ்னெய்டர்) Electric World Skill Academy உடன் இணைந்து Smart Manufacturing Technology Centres-யும் இன்று திறந்து வைத்திருக்கின்றோம்.

Read More