china

அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா மீதான வரி 10% குறைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
வரி விதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே நிலவிய வர்த்தகப் போரின் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது உடனே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இதற்கு முன்பாக, சீனப் பொருட்களுக்கு 57 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு 47 சதவிகிதமாக உள்ளது.

Read More
அரசியல்இந்தியாஉலகம்வணிகம்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155% வரி’…டிரம்ப் எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் ஒரு “நியாயமான வர்த்தக ஒப்பந்தம்” எட்டப்படாவிட்டால், அந்நாட்டு பொருட்கள் மீது 155% வரை வரி விதிக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக்கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் 55% வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம். அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றார் டிரம்ப்.

பல நாடுகள் முன்பு அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தின, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் தனது வர்த்தகப் பங்காளிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பிறகு இப்போது யாரும் சாதகமாகப் பயன்படுத்துவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், “எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது இன்னும் 2 வாரங்களில் தென் கொரியாவில் நாங்க சந்திப்போம்” என்றார்.
வரவிருக்கும் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், “எங்களிடம் எல்லாவற்றிலும் சிறந்தது உள்ளது, யாரும் அதைச் சீர்குலைக்கப் போவதில்லை… நாங்கள் மிகவும் வலுவான வர்த்தக ஒப்பந்தத்துடன் முடிப்போம் என்று நினைக்கிறேன். இருவருமே மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று மேலும் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் லி செங்காங்கை நீக்கிவிட்டதாக சீனா உறுதிப்படுத்தியது. அவருக்குப் பதிலாக லி யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More