budget

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்-முக்கிய அறிவிப்புகள்….

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல்* மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு. * 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
* விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.175 கோடி செலவில் 3.4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இலவச தென்னங்கன்று வழங்க ரூ.78.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள். அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.27 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் * அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடையும் விதமாக, கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட இருக்கிறது.ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் * பயிர் சேதங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயிர் சேத நிவாரணத்தால் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் பன்னீர்செல்வம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்- தங்கம் தென்னரசு தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது-
8 லட்சம் வீடுகள் இலக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்,கனவரால் கைவிடப்பட்டோர், முதியோர் உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகிறார்கள் புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.

ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன – தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது.

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும், 5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள்.

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன.

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..மற்றும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை…

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

“உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது”

2025-26-ல் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக, 2025-26 நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை அவர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகர்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ள போதிலும், இது நாட்டின் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தரவு மையங்கள் பெருகி வருவது மற்றும் மின்சார தேவை அதிகரிப்பு காரணமாக உலகம் முழுவதும் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மத்திய பட்ஜெட் 2026: பிப்ரவரி 1-ல் தாக்கல்; நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். இந்த அறிவிப்புகள் வரும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை மத்திய பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (indiabudget.gov.in), சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பல தேசிய செய்தி சேனல்களும் நேரலை ஒளிபரப்பை வழங்கும், அதே நேரத்தில் சன்சாத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆகியவை தங்களது யூடியூப் தளங்களில் நேரலை செய்வதோடு சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.

இவை தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) இணையதளத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் பகுப்பாய்வு குறித்த நேரடித் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25-ல் இருந்த 6.5 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படாத பெயரளவு ஜி.டி.பி வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2026-27 பட்ஜெட்டில் வரி வருவாயை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணியாகும்.
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஒரு மிஷன் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய மிஷனை அமைத்தல் ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட கே.சி.சி கடனை அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகிறது என்றும், அதிக கடன் வரம்பு நிறுவனக் கடன்களைப் பெறுவதை மேம்படுத்தும் என்றும் சீதாராமன் கூறியிருந்தார்.

Read More