Bihar

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பீகார் அமைச்சரவை ஃபார்முலா: பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு சம பங்கு;

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்த பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகிய 2 பெரிய கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூட்டணியில் ஆரம்ப முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, 2 பெரிய கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகளை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் ஜிதன் ராம்மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலா 1 துறை வழங்கப்படலாம். இதுவே தற்போது விவாதத்தில் உள்ள ஃபார்முலா ஆகும். ஆலோசனைகள் நடந்து வருகின்றன. துறைகள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம், அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) பாட்னாவில் சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து, புதிய அரசாங்கம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க சட்டமன்றக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 17-வது பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவ.22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. பாஜக- 89, ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) – 85, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJP(RV) – 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – HAM(S) – 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM – )4.

2020 தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அப்போது அமைந்த அரசில், பா.ஜ.கவுக்கு 22 அமைச்சர்களும், நிதீஷ் குமார் கட்சிக்கு 12 அமைச்சர்களும் மட்டுமே இருந்தனர். கூட்டணி வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு அமைப்பது குறித்து சந்தித்தனர்.

Read More
இந்தியா

உயிருடன் இருக்கும் நபர் இறந்துவிட்டதாக சான்றிதழ்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

பீகார் மாநிலத்தில் உயிருடன் இருக்கும் நபரை இறந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் மரண சான்றிதழ் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இருக்கும்

Read More