63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை முன்கூட்டியே வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைபோலவே புதுச்சேரியிலும் மகளிருக்கான நிதியுதவித் தொகையை முன்கூட்டியே வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.
21 வயது முதல் 55 வயதுக்குள் உள்ள, சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்துள்ள பெண்கள் இத்திட்டத்திற்கான பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.இதனிடையே இந்த தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கான 5,000 ரூபாயை முன்கூட்டியே சேர்த்து வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார்.
