Assembly

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பேரவையில் இன்று தீர்மானம்…

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை 99 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்தார். போராடும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமே தவிர, அதிமுகவைப் போன்று எஸ்மா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றும் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைப் போல பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களை தாங்கள் ஏமாற்றவில்லை என்றார். இதில் பதில் அளித்த முதலமைச்சர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திமுகவுக்கு ஆதரவான சங்கங்கள்தான் இனிப்பு ஊட்டியதாக ஈபிஎஸ் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், மிகுந்த அக்கறையோடு கவனிப்பதாகவும் கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து கொச்சைப்படுத்தி பேசியதை நாடு மறந்துவிடவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, நேரமில்லா நேரத்தில், கறிக்கோழி விவசாயிகளின் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு, அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் தயாரித்து விட்டு ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், இதனை ஏற்காத அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக பேரவையில், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 100 நாட்கள் பணிக்காலம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறிய ஈபிஎஸ், மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளதை தாங்கள் வரவேற்றதாகவும், ஆனால் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சட்டசபை கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டின் முதல் சட்ட சபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முழு உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையின் போது தொடர்ந்து உரையை வாசிக்காமல் சென்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டு சட்டசபையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டசபைக்கு வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்ட சபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் தன் உரையை முழுமையாக வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு முறை மசோதா -சட்டசபையில் இன்று தாக்கல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.
இந்நிலையில் இன்று 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. கடைசி நாளில், அதாவது 17 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட இருக்கிறது. அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அப்பாவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வைக்கும் மசோதாவும் தாக்கலாக வாய்ப்பு உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் இன்றுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More