America

அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
இந்தியா

இந்தியர்களுக்கு வந்த ஆபத்து.. மொத்தம் 18000 பேர்.. வாடகை விமானங்கள் மூலம் நாடு கடத்த தயாரான டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் , அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றவுடன், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதற்குத் தயாராகும் வகையில், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சுமார் 15 லட்சம் பேரின் பட்டியலை தயாரித்துள்ளது.
அவர்களில் சுமார் 18,000 இந்திய குடிமக்கள் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நாடு கடத்தப்படும் இறுதி பட்டியலில் 15 லட்சம் பேரில் 17,940 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக அமெரிக்காவில் சுமார் 725,000 இந்தியர்கள் குடியேறியுள்ளனர். அக்டோபரில், இந்தத் தரவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட விமானம், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வாடகை விமானம் மூலம் வரும் ஜனவரி மாதம் முதல் நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஆவணமற்ற இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை சட்டப்பூர்வமாக்க போராடி வருகின்றனர். கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் அமெரிக்க எல்லைகளை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Covid19உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று . இந்த தொற்று உலக நாடுகளை இன்று வரை

Read More
உலகம்

16 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து – அதிபர் ஜோ பைடன்!

16 வயது மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போவதற்கு தகுதியானவர்கள் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது

Read More