ambedkar

அரசியல்இந்தியாதமிழ்நாடு

அம்பேத்கர் பற்றி நான் அப்படி பேசவில்லை: அமித் ஷா மறுப்பு!

அம்பேத்கருக்கு எதிராக தன்னால் எப்போதும் பேச முடியாது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அமித் ஷா இன்று (டிசம்பர் 18 ) பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.
இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது, அவர், “அண்மை காலமாக அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்து வந்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கூறினார்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் அமித் ஷா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சி திரித்து கூறிய விதம் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் அரசு அம்பேத்கருக்காக ஒரு போதும் மணிமண்டபம் கட்டியதில்லை. அம்பேத்கருடன் தொடர்புடைய பல இடங்களை கட்டியது பாஜக அரசுகள் தான். அவரது பாரம்பரியத்தை போற்றும் படி அரசியலமைப்பு தினத்தை அறிவித்தது மோடி அரசுதான்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜகவினர், நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் எவ்வாறு அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாத்தோம் என்பதனை பட்டியலிட்டனர். இது காங்கிரஸ் கட்சி, அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் வீர் சாவர்கரை அவமதித்தது, அவசரநிலையை கொண்டுவந்ததன் மூலம் அரசியலமைப்பை அவமதித்தது” என்று தெரிவித்தார்.

Read More