Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.22-ம் தேதி) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி நேர நிலவரப்படி, 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்டேபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பிறகே புயல் உருவாகுமா என்பது பற்றி கணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Read More
Emplymentதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மும்பை ஐ.ஐ.டி., ரோபர், கூகுள், எம்.ஐ.டி நிறுவனங்கள் வழங்கும் இலவச Phython படிப்புகள் …

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், அல்லது கோடிங் முறையில் ஆர்வம் உள்ளவர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் விடுமுறைக் காலம் என்பதால், தொழில்நுட்ப உலகில் உங்கள் பயணத்தைத் தொடங்க இந்தத் தீபாவளி சரியான தருணமாக அமையலாம். மாணவர்கள், பணிபுரிபவர்கள் அல்லது குறியீட்டு முறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற, ஸ்வயம், (SWAYAM), எம்.ஐ.டி (MIT) மற்றும் கூகுள் (Google) வழங்கும் சில இலவச பைதான் புரோகிராமிங் படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஸ்வயம் (SWAYAM) தளத்தில் இலவசப் படிப்புகள்

1. பைதான் 3.4.3 (Python 3.4.3)

வழங்குபவர்: பேராசிரியர் கண்ணன் மௌட்கல்யா (Kannan Moudgalya), ஐஐடி பாம்பே.

படிப்பு: இது ஐ.சி.டி (ICT) வழியாகக் கல்விக்கான தேசிய இயக்கத்தின் (National Mission on Education through ICT) கீழ் உள்ள ‘ஸ்போக்கன் டுடோரியல்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் 39 ஒலி-ஒளி பயிற்சிகள் உள்ளன. மாணவர்கள் iPython-ஐ நிறுவி, பயிற்சிகளைப் பார்த்து, அதனுடன் குறியீட்டு முறையைப் பயிற்சி செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இளங்கலை மாணவர்கள் மற்றும் புரோகிராமிங்கிற்குப் புதியவர்கள். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை.
மேலும் அறிய: courses.swayam2.ac.in/aic20_sp33/preview

2. பைதான் மற்றும் பெட்ரோலியத் தரவு பகுப்பாய்வுக்கான அறிமுகம் (Introduction to Python and Petroleum Data Analytics)

வழங்குபவர்: பேராசிரியர் அர்ச்சனா, ஐஐடி (ISM) தன்பாத்.

படிப்பு: 12 வாரங்கள் கொண்ட இந்தப் பாடத்திட்டம், பெட்ரோலியப் பொறியியலில் தரவு சார்ந்த (Data-driven) பாத்திரங்களுக்கு மாற விரும்பும் பொறியியல் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கானது. இது பைதான் அடிப்படைகளுடன் தொடங்கி, பாண்டாஸ் (Pandas), நம்ப்பை (NumPy) மற்றும் மேட்ஃப்ளாட்லிப் (Matplotlib) போன்ற நூலகங்களைப் பயன்படுத்தித் தரவு கையாளுதல், காட்சிப்படுத்துதல் போன்றவற்றுக்குச் செல்கிறது. இது மேற்பார்வையிடப்பட்ட (supervised) மற்றும் மேற்பார்வையிடப்படாத (unsupervised) எந்திர கற்றல் (Machine Learning) வழிமுறைகளையும் உள்ளடக்கியது.

குறிப்பு: இந்தப் பாடத்திட்டத்தை இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சான்றிதழ் பெறத் தேர்விற்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_ch97/preview

3. பைதான் பயன்படுத்தி கணினிமயமாக்கலின் மகிழ்ச்சி (The Joy of Computing using Python)

வழங்குபவர்: பேராசிரியர் சுதர்சன் ஐயங்கார், ஐஐடி ரூர்க்கி.

படிப்பு: இந்தக் கூடுதல் பாடத்திட்டம், சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகள் மற்றும் நிஜ உலகப் பயன்பாடுகள் மூலம் பைதான் அறிமுகப்படுத்துகிறது. இது மாறிகள், சுழல்கள், தரவு கட்டமைப்புகள் மற்றும் படச் செயலாக்கம், உணர்வு பகுப்பாய்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு போன்ற தலைப்புகளையும் உள்ளடக்கியது.

யாருக்கு ஏற்றது: உயர்நிலைப் பள்ளிக் கல்வி பின்னணி உள்ள எவரும். இது தர்க்கரீதியான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

குறிப்பு: இலவசமாகப் பதிவு செய்யலாம், சான்றிதழ் பெற நவம்பர் 1, 2025 அன்று நடைபெறும் தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அறிய: onlinecourses.nptel.ac.in/noc25_cs103/preview

4. பைதான் அடிப்படைகள் (Python Fundamentals)

வழங்குபவர்: 360Digi (Swayam Plus தளத்தில்).

படிப்பு: தொடக்கநிலையாளர்களுக்கான இந்தக் கோர் பைதான் பாடத்திட்டம், பைதான் தரவுக் கட்டமைப்புகள், பல-திரிப்புகள் (multi-threading), விதிவிலக்கு கையாளுதல் மற்றும் கோப்புச் செயல்பாடுகள் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை உள்ளடக்கியது.

சான்றிதழ்: இந்தக் கோர்ஸ் இலவசம், வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் அறிய: swayam-plus.swayam2.ac.in/courses/course-details?id=F_360DIGI_08

கூகுள் (Google) வழங்கும் பாடத்திட்டம்

கூகுள் பைதான் வகுப்பு (The Google Python Class)

பற்றி: கூகுள் உருவாக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்த இலவசப் பாடத்திட்டம், புரோகிராமிங்கில் சிறிது அனுபவம் உள்ளவர்கள் பைதான் கற்க விரும்பினால் ஏற்றது. இதில் எழுதப்பட்ட பொருட்கள், விரிவுரைக் காணொளிகள் மற்றும் தொடர் குறியீட்டு பயிற்சிகள் உள்ளன. சரங்கள் (strings) மற்றும் பட்டியல்கள் (lists) போன்ற அடிப்படை தலைப்புகளிலிருந்து தொடங்கி, வழக்கமான வெளிப்பாடுகள், கோப்பு I/O மற்றும் HTTP இணைப்புகள் போன்ற மேம்பட்ட தலைப்புகளுக்குச் செல்கிறது.

மேலும் அறிய: developers.google.com/edu/python

எம்.ஐ.டி (MIT) வழங்கும் பாடத்திட்டம்

கணினி அறிவியல் மற்றும் பைதான் புரோகிராமிங்கிற்கான எம்.ஐ.டி (MIT) அறிமுகம் (MIT’s Introduction to Computer Science and Programming in Python)

வழங்குபவர்: எம்.ஐ.டி (MIT) (திறந்தநிலை படிப்புகள் மூலம்).

படிப்பு: (Course 6.0001) என அறியப்படும் இது, புரோகிராமிங் அனுபவம் இல்லாத மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அடிப்படைப் பாடத்திட்டமாகும். இது எளிய வழிமுறைகள், தரவுக் கட்டமைப்புகள், பிழைதிருத்தம், சோதனை மற்றும் கணக்கீட்டு சிக்கல்தன்மை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது. தொகுதிக் குறியீட்டு முறை (Modular programming) மற்றும் பொருள் சார்ந்த வடிவமைப்பு (object-oriented design) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறது.

யாருக்கு ஏற்றது: மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் மேம்பட்ட படிப்புகளுக்கு அடித்தளமிட விரும்பும் தொடக்கநிலையாளர்களுக்கு இது சிறந்தது.

மேலும் அறிய: ocw.mit.edu/courses/6-0001-introduction-to-computer-science-and-programming-in-python-fall-2016/

Read More
அரசியல்இந்தியாஉலகம்வணிகம்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155% வரி’…டிரம்ப் எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் ஒரு “நியாயமான வர்த்தக ஒப்பந்தம்” எட்டப்படாவிட்டால், அந்நாட்டு பொருட்கள் மீது 155% வரை வரி விதிக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக்கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் 55% வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம். அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றார் டிரம்ப்.

பல நாடுகள் முன்பு அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தின, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் தனது வர்த்தகப் பங்காளிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பிறகு இப்போது யாரும் சாதகமாகப் பயன்படுத்துவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், “எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது இன்னும் 2 வாரங்களில் தென் கொரியாவில் நாங்க சந்திப்போம்” என்றார்.
வரவிருக்கும் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், “எங்களிடம் எல்லாவற்றிலும் சிறந்தது உள்ளது, யாரும் அதைச் சீர்குலைக்கப் போவதில்லை… நாங்கள் மிகவும் வலுவான வர்த்தக ஒப்பந்தத்துடன் முடிப்போம் என்று நினைக்கிறேன். இருவருமே மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று மேலும் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் லி செங்காங்கை நீக்கிவிட்டதாக சீனா உறுதிப்படுத்தியது. அவருக்குப் பதிலாக லி யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் (காலை 10 மணி வரை) அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு, வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், சாலிகிராமம், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியான தாம்பரம், வண்டலூர், சேலையூர், முடிச்சூரில் மழை வெளுத்து வாங்கியது.
தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனைப்புதூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை
சிறுவாணி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றால பிரதான அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் எப்படி காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதோ, அதே போல இரவு நேரத்திலும் காணமுடிந்தது. பெரம்பலூர் மாநகரில் தீரன் நகர், கவுல்பாளையம், வேப்பந்தட்டை, பாடாலூர், குன்னம், ஆலத்தூரில் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி

மோடி – டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி
ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“எனக்குக் கிடைத்த தகவலின்படி, நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே எந்தவிதமான தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வியாழக்கிழமை அன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.

முன்னதாக, ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.

“இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் நிரந்தர முன்னுரிமையாக இருந்து வருகிறது. நம்முடைய இறக்குமதி கொள்கைகள் முழுவதுமாக இந்தக் குறிக்கோளையே வழிநடத்துகின்றன” என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
“நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதிசெய்வதே நம்முடைய எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இது, சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக நம்முடைய எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறியுள்ளது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத போர், ஆனால், ரஷ்யா முதல் வாரத்திலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும், இப்போது அவர்கள் நான்காவது ஆண்டிற்குள் செல்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

“எனவே, இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, அவர்கள் [பிரதமர் மோடி] இன்று ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளார். உடனடியாக இதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்குச் சற்று கால அவகாசம் தேவை, ஆனால், அந்தக் கால அவகாசம் விரைவில் முடிவடையும்” என்று அவர் கூறினார்.

“அது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம்” என்று கூறிய அவர், பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பது, “நாங்கள் கடந்த வாரம் மத்திய கிழக்கில் செய்ததை விட (போரை நிறுத்த) ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும்” என்றும் கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும், அவரால் ஏற்படுத்தப்பட்ட அமைதித் திட்டத்தின் கீழ் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் அமெரிக்க அதிபர் இங்கே குறிப்பிட்டார்.

“இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது [ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது] எளிதாகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர், போர் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்குச் செல்வார்கள்” என்று டிரம்ப் கூறினார்.

ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான இறக்குமதிகள் அதிபர் விளாடிமிர் புதினின் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கின்றன என்று அமெரிக்கா கருதுவதால், இது குறித்த கவலைகளை பிரதமர் மோடியிடம் எழுப்பியதாகவும் டிரம்ப் மேலும் கூறினார். “இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

மோடியுடனான உறவு குறித்து டிரம்ப்

பிரதமர் மோடியுடனான தனது உறவைப் பற்றி டிரம்ப் அன்புடன் பேசினார்.

“மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார்” என்று அவர் தன்னைப் பற்றி மூன்றாம் நபரில் குறிப்பிட்டார். “நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். இது ஒரு நம்ப முடியாத நாடு, மேலும், ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் இருப்பார். எனது நண்பர் (மோடி) இப்போது நீண்ட காலமாக அங்கு இருக்கிறார்.”

டிரம்ப் இவ்வாறு கூறியது, இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணெய் இறக்குமதிகள் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரியை விதித்த கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது.

Read More
இந்தியாதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்வணிகம்

இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: கணிப்பை விட 0.2% – IMF

நடப்பு நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்​எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) நடப்பு 2025-26 நிதி​யாண்​டில் 6.4% வளரும் என ஜூலை மாதம் வெளி​யிட்ட உலக பொருளா​தார கண்​ணோட்ட அறிக்​கை​யில் குறிப்​பிட்​டிருந்​தோம்.

ஆனால், முதல் காலாண்​டில் நிறு​வனங்​களின் லாபம் கணிச​மாக அதி​கரித்​திருந்​தது. 5 காலாண்​டு​களில் இல்​லாத வகை​யில், முதல் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக இருந்​தது. மேலும் உள்​நாட்டு தேவை அதி​கரிப்​பு, அரசின் செல​வினம் அதி​கரிப்பு உள்​ளிட்ட சில காரணங்​களால், இந்​தி​யா​வின் ஜிடிபி நடப்பு நிதி​யாண்​டில் 6.6% ஆக உயரும்.
இந்​திய பொருட்​களின் இறக்​கும​திக்கு அமெரிக்கா கூடு​தல் வரி விதித்​துள்​ளதால், 2026-27 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் ஜிடிபி 6.2% ஆக குறை​யும். முந்​தைய கணிப்​பில் 6.4% ஆக இருக்​கும் என கணித்​திருந்​தோம். 2025-26ல் உலக நாடு​களின் சராசரி ஜிடிபி 3.2% ஆக இருக்​கும். அடுத்த 2026-27 நிதி​யாண்​டில் இது 3.1% ஆக இருக்​கும். 2024-25-ல் இது 3.3% ஆக இருந்​தது. வளர்ந்த நாடு​களின் சராசரி ஜிடிபி 1.5%ஆக இருக்கும்.
அமெரிக்கா​வின் ஜிடிபி 2% வளரும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இது​போல, இந்​தி​யா​வின் ஜிடிபி 6.3% வளரும் என உலக வங்கி ஏற்​கெனவே கணித்​திருந்​தது. இந்​நிலை​யில், இந்த கணிப்பை 6.5% ஆக உலக வங்கி கடந்த மாதம் உயர்த்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது. ஐஎம்​எப் கணிப்​பின்​படி, உலகில் வேக​மாக வளரும் பொருளா​தாரமாக இந்​தியா உள்​ளது.விரை​வில் ஜப்​பானை பின்​னுக்​குத் தள்ளி 4-வது பெரிய பொருளா​தாரமாக இந்​தியா உரு​வெடுக்​கும். அதன் பிறகு, ஜெர்​மனியை பின்​னுக்​குத் தள்ளி 3-ம் இடத்​துக்கு முன்​னேறும் என்​றும் ஐஎம்எப் கணித்​துள்​ளது.
இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: முந்தைய கணிப்பை விட 0.2% உயர்த்தியது ஐஎம்எப்

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு முறை மசோதா -சட்டசபையில் இன்று தாக்கல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.
இந்நிலையில் இன்று 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. கடைசி நாளில், அதாவது 17 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட இருக்கிறது. அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அப்பாவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வைக்கும் மசோதாவும் தாக்கலாக வாய்ப்பு உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் இன்றுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு-கரூர் சம்பவம்

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாஜக வழக்கறிஞரும் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது.
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை யார் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
அப்போது, கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜயை, சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருப்பதாக தவெக தரப்பு சுட்டிக்காட்டியது. கரூரில் உயிரிழப்பு நடந்தவுடன் காவல்துறை தான் விஜயை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக நிர்வாகிகள் சிலரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
மேலும், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் வினவினர். ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டது.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருப்பதால், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறினார். தொடர்ந்து பிற மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ரவுடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தியதாலும்தான் இந்த விபத்து ஏற்பட்டது என வாதிட்டனர்.
இரவில் உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்பு அனுமதியுடன் உடற்கூராய்வை இரவில் நடத்தலாம் என்றும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை தொடர்ச்சியாக தெரிவிப்பவர்கள், என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.
நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய், இரவு 7 மணிக்கு தாமதாக வந்ததாகவும் வில்சன் சுட்டிக்காட்டினார். காலை முதலே அங்கு கூடியிருந்த மக்கள் தண்ணீர் மற்றும் உணவின்றி சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்ததாகவும், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டபோது அவர்கள் முண்டியடித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டத்தில் ரவுடிகளோ, ஆளும் கட்சியின்ரோ புகுந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் வாதிட்டார். தொடர்ந்து, வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில்,கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் விசாரிப்பது என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பொங்கல் பரிசுத் தொகை -சலுகைகளை பெற-  PHH அல்லது NPHH ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே…

தமிழ்நாட்டில் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கல் ரொக்கப் பரிசு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றை அறிவிக்கும்போது ரேஷன் அட்டைகளின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.
அரசு அறிவிக்கும் இந்த ரொக்கம் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் கிடைக்குமா என்றால் இல்லை. சில குறிப்பிட்ட அட்டைகளுக்கு இந்த ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும் PHH அட்டை, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் இருந்தாலும், சலுகைகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் NPHH அட்டை, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இல்லாமல், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கிடைக்கும் NPHH –S அட்டை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள முதியோருக்கு அதிக அளவில் அரிசி கிடைக்கும் AAY அட்டை, வெறும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் பயன்படும் NPHH-NC அட்டை ஆகியவைதான் இந்த ஐந்து வகைகள்.
நீங்கள் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அரிசி அட்டையான PHH அல்லது NPHH அட்டை வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் அதனை மாற்ற முடியுமா என்றால் நிச்சயம் முடியும்!
அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை அட்டைக்கு மாற விரும்பினால் அதனை எளிதில் பெற்றுவிடலாம். நீங்கள் (TN PDS) இணையதளம் (tnpds.gov.in) அல்லது அதன் மொபைல் செயலி மூலம் எளிதில் விண்ணப்பித்து அரிசி அட்டையில் இருந்து சர்க்கரை அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாறுவது என்றால் அது கொஞ்சம் சிக்கலானதே. ஆனால், அரசு கேட்கும் ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் எளிதாக மாறிவிடலாம். அரசு கேட்கும் ஆவணங்கள் என்ன தெரியுமா?
நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதையும், அரசின் சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதையும் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். உண்மையிலேயே ஏழ்மையில் இருப்பவர்கள் அல்லது பொருளாதாரச் சூழல் மாறியதால் தகுதியானவர்கள், முறையாக விண்ணப்பித்தால் அட்டை வகையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மண்டே பெட்டிஷன்) மனு கொடுக்க வேண்டும்.
இதனுடன் நீங்கள், ஆதார் அட்டை, புகைப்படங்கள், வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ளவர் என்பதற்கான ஆதாரம், வி.ஏ.ஓ.விடம் உங்கள் பொருளாதார நிலை குறித்தான அறிக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மனு உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலருக்கு (DSO) அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இத்துடன் உங்கள் ஆதார் எண் மூலம் மத்திய அரசின் தரவுகளைச் சரிபார்த்து, உங்கள் உண்மையான சொத்து மதிப்பு, வருமானம், வரி விவரங்கள், நீங்கள் வாங்கிய கடன்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வார்கள். எனவே முறைகேட்டில் ஈடுபட்டு சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற முடியாது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார். காலை 9.45 மணிக்கு உலக புத்தொழில் மாநாடு 2025-ஐ முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பின்னர் 11 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சுமார் 1,791 கோடி ரூபாயில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். 12 மணிக்கு சிட்கோ தொழிற்பேட்டை அருகே 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

Read More