எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது..! திருநெல்வேலி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட கனிமொழி எம்பி..
எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என்பதனை வலியுறுத்தி இன்று (21/01/2022) வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி எல்ஐசி அலுவலகம் எதிரே திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டார் கனிமொழி கருணாநிதி எம்பி

இந்நிகழ்வில் மூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்
