வொண்டர் உமன் கெட்-அப்பில் அசத்தல் போட்டோஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்..!
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம்கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், ஜீவனின் பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டும் போட்டோஷூட்டினை ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்தவகையில் தற்போது சேலை அணிந்தபடி வொண்டர் உமன் கெட்-அப்பில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகளும் கமெண்டுகளும் தாறுமாறாக வருகிறது.

