கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பெருமைக்குரியவை – பொன்.ராதாகிருஷ்ணன்
கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பெருமைக்குரியவை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நாகர்கோவில் மாநகர் வடக்கு மண்டல் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கலந்துகொண்டார் .
நிகழ்ச்சிக்கு பின்னர் கீழடி குறித்து பேசிய அவர் கூறியதாவது :
“கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை இன்னும் நமது தொன்மை கண்டுபிடிக்க வேண்டும்”
இதே போல் குமரி கண்டம் குறித்த ஆய்வும் நடத்தப்பட வேண்டும் அப்போது தான் தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என தெரிவித்தார்
