தமிழ்நாடு

ஆடி அமாவாசை, ஆடிப்பூர நாட்களில் கோயில்களுக்கு பக்தர்களுக்கு செல்ல தடை…

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 8 ஆம் தேதி மற்றம் 11 ஆம் தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி அமாவாசை, புதன் கிழமை ஆடிப்பூரமும் வருவதால், பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை மற்றும் புதன் கிழமை ஆடிப்பூரம் நாட்களில் கோயில்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆகம விதிமுறைப்படி கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலமைச்சர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோயில்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த 3 நாட்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை மற்றும் புதன்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.