அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குண்ணாத்தூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

வரலாற்றில் இந்நாள் பொன்நாளாகும். கடந்த 1977ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று முதன் முதலாக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பணியாற்றிய நாளாகும்.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.