சமூகவலைத்தளத்தில் வசைபாடிய டிரம்ப்க்கு …. 2 ஆண்டுகள் கை பூட்டு போட்டது பேஸ்புக் நிர்வாகம் !
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போட்டியிட்ட , ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் படு தோல்வி அடைந்தார். ஜனவரியில் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் வன்முறையை துாண்டும் வகையில், பேஸ்புக் சமூக வலைதளத்தில், டிரம்ப் பதிவிட்ட கருத்துகள் தான் காரணம் என, கூறப்பட்டது. டிரம்பின் கணக்கை சஸ்பெண்ட் செய்வது குறித்து மேற்பார்வை நிபுணர்கள் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. ‘சஸ்பெண்ட்’ செய்யட்டதை, நிபுணர்கள் ஏற்றனர்.
இதையடுத்து, டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், பொது பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் டிரம்பின் பேஸ்புக் கணக்கை மீண்டும் அனுமதிப்பது என பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
