jananayagan

சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் – தணிக்கையில் என்ன….பிரச்சினை…

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்​கக் கோரிய வழக்​கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

தவெக தலை​வர் நடிகர் விஜய்​-​யின் கடைசிப் படமான ‘ஜன​நாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழு​வதும் திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டிருந்​து.

இந்த நிலையில்தான், படத்​துக்கு சான்​றிதழ் வழங்க தணிக்கை வாரி​யம் தாமதம் செய்து வரு​வ​தாகக் கூறி, படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. அப்போது, தணிக்கை வாரி​யம் தரப்​பில் மத்​திய அரசின் கூடுதல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆஜராகி, படத்​துக்கு எதி​ராக தணிக்கை குழு உறுப்​பினர் ஒரு​வர் அளித்த புகாரை தாக்கல் செய்​தார்.
படத் தயாரிப்பு குழு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன், வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் ஆகியோர், “படத்​தைப் பார்த்து தணிக்கை சான்​றிதழ் அளிக்​கும் தணிக்கை குழு உறுப்​பினரே, எப்​படி படத்துக்கு எதி​ராக புகார் அளிக்க முடி​யும்? இதில் உள்நோக்​கம் உள்​ளது” என்​றனர்.

அப்​போது தணிக்கை வாரி​யம் தரப்​பில், “படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பும்​படி மத்​திய அரசு கூற​வில்​லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்​துள்​ளது. அவ்​வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலை​வருக்கு முழு அதி​காரம் உள்​ளது. படத்​தில் பாது​காப்பு படைகளின் சின்​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சான்​றிதழ் வழங்​கு​வ​தில் தணிக்கை வாரி​யத்​துக்கு எந்த உள்​நோக்​க​மும் இல்​லை” என்று வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, “யு/ஏ சான்​றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்​துரை செய்த பிறகு, அந்​தப் படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்ப முடிவு செய்​தது ஏன்? தணிக்கை வாரி​யத்​தின் நடவடிக்​கைகள் ஏற்​புடையதல்ல” என்​றார்.
படத் தயாரிப்பு நிறு​வனம் தரப்​பில், “பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் யு/ஏ சான்​றிதழ் வழங்க பரிந்​துரைத்​துள்ள நிலை​யில், ஒரு​வர் மட்டும் புகார் அளித்​துள்​ளார் அவர்களின் நோக்​கம் திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிடக்​கூ​டாது என்​பது​தான்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “இந்த வழக்​கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ‘ஜனநாயகன்’ குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

Read More