deepavali gift

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ரூ.5000… தீபாவளி பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு திட்டம்…

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்குவதற்குச் சுமார் ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியைத் திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு போட்டியாகவும், தமிழக அரசு தனது பொங்கல் பரிசு அறிவிப்பை, தீபாவளி பண்டிகை வரும் அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 2025ஆம் ஆண்டு பொங்கலின்போது, நிதி நெருக்கடி காரணமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கமளித்திருந்தார். அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே, இந்த முறை பொங்கலுக்கு அதிகத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு, வருகிற தீபாவளி பண்டிகையின்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More