அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை

*கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்

*பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.