விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி – மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார் அவனி லெகாரா..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்து வருகின்றன.

Image

மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.

Image

பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.