Covid19தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் இருக்கும் மக்களின் உயிர்களை ஏழை பணக்காரன் என பாரபட்சம் இன்றி பறிக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது .

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் இந்தியாவின் பல துறைகளில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 7 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் .

இந்நிலையில், தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்துதலின் பேரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.