Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30, 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30, 621பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 297பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 287பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 58,129மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,621பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 30,608பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,99,485ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,46,25,416 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,532பேர் ஆண்கள், 13,089 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,99,757ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,99,720ஆகவும் அதிகரித்து உள்ளது. 19,287பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,98,945ஆக உயர்ந்தது.

297பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 109பேர் தனியார் மருத்துவமனையிலும், 188பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.