ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க…’ பிரதமர் மோடி அறிவுறுத்தல்.. ஈரான் மீது கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை உயர்த்த மக்கள் உதவ வேண்டும் என்றும், அந்த வகையில் அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிக பணம் செலவிடுவதாக கூறிய பிரதமர் மோடி, மக்கள் அதன் பயன்பாட்டை குறைப்பது நாட்டுக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றார்.
